உள்ளூர் செய்திகள்
ஆலங்குளம் அண்ணா நகரில் ரூ.27 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை - பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
- பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் ஏ.சுதா மோகன்லால் தலைமை தாங்கினார்.
ஆலங்குளம்:-
ஆலங்குளம் பேரூராட்சி, அண்ணாநகர் பகுதியில், ரூ.27 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.
ஆலங்குளம் பேரூராட்சி, 11-வது வார்டு, அண்ணாநகர் 3-வது தெரு 3-வது சந்து பகுதியில், 15-வது மானியக்குழு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் ஏ.சுதா மோகன்லால் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், 11-வது வார்டு உறுப்பினர் வென்சிராணி, 12-வது வார்டு உறுப்பினர் எஸ்.டி.சாலமோன்ராஜா, தொழிலதிபர் ஏ.மோகன்லால், சீதாராமன், பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள் அருள்ராஜ், செல்வின், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.