உள்ளூர் செய்திகள்

பரோலில் வந்த கைதி தலைமறைவு

Published On 2023-01-31 09:57 GMT   |   Update On 2023-01-31 09:57 GMT
  • மோகன் (வயது 54). இவரை கடந்த 2009-ம் ஆண்டு, அம்மாபேட்டை போலீசார் ஒரு வழக்கில் கைது செய்தனர்.
  • இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி 3 நாள் பரோலில் வெளியே வந்த மோகன், மீண்டும் சிறைக்கு செல்லவில்லை.

சேலம்:

சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் சித்தாகவுண்டனூர் தெரு, டி.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 54).

இவரை கடந்த 2009-ம் ஆண்டு, அம்மாபேட்டை போலீசார் ஒரு வழக்கில் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டு கோவை சிங்காநல்லூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி 3 நாள் பரோலில் வெளியே வந்த மோகன், மீண்டும் சிறைக்கு செல்லவில்லை.

இதையடுத்து சிங்காநல்லூர் ஜெயில் சூப்பிரண்டு ஊர்மிளா, நேற்று இதுகுறித்து அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து, மோகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News