உள்ளூர் செய்திகள்

பரமத்தி வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

பரமத்தி வட்டார சுகாதார பேரவை கூட்டம்

Published On 2022-08-17 09:18 GMT   |   Update On 2022-08-17 09:18 GMT
  • பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டார சுகாதார பேரவை கூட்டம் அர்த்தனாரி பாளையத்தில் நடைபெற்றது.
  • அரங்கத்தில் அமைக்கப்பட்டி––ருந்த பொது சுகாதாரம், குடும்ப நலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், ஐ.சி.டி.சி. போன்ற துறைகளினால் அமைக்கப்பட்ட கண்–காட்சியை பார்வையிட்டனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டார சுகாதார பேரவை கூட்டம் அர்த்தனாரி பாளையத்தில் நடைபெற்றது. சுகாதார பேரவை அட்மா சேர்மன் தனராசு தலைமை வகித்தார். பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி, வேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகுத்தனர். அதை தொடர்ந்து அனைவரும் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகலா வரவேற்றார். நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன் கலந்துகொண்டு திட்ட விளக்க உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்கள் நல்லூர் பொன். விஜய்ராகுல், குன்னமலை பூங்கொடி, கூடசேரி சுப்பிரமணி, பில்லூர் சரண்யா,பிள்ளைகளத்தூர் வனிதா, நடந்தை வசந்தா, மாணிக்கநத்தம் வேலுசாமி, மேல் சத்தம் யோகாம்பிகா உட்பட 20 ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள், பரமத்தி ஒன்றிய குழு உறுப்பி னர்கள், வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிர மணியன், பரமத்தி பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், கந்த ம்பாளை யம் அரிமா சரவணன், கந்தம்பா–ளையம் ரிக் உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த கேப்டன் துரைசாமி, வட்டார கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுப்ப–ணித்துறை அலுவலர் ஆகி–யோர் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு நகர சுகாதார அலுவலர் டாக்டர் மணிவேல், சுகாதார பணிகள் உதவி திட்ட அலுவலர் டாக்டர் ரமேஷ், மாவட்ட சுகாதார பணிகள் பயிற்சி மருத்துவர் டாக்டர் விஜயராகவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பள்ளித் தலைமை ஆசிரியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவி–லியர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அரங்கத்தில் அமைக்கப்பட்டி––ருந்த பொது சுகாதாரம், குடும்ப நலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், ஐ.சி.டி.சி. போன்ற துறைகளினால் அமைக்கப்பட்ட கண்–காட்சியை பார்வையிட்டனர். டெங்கு, குடும்ப நலம் சார்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. முன்மொழிவுகள் தீர்மானங்க–ளாக நிறைவேற்றப்பட்டு துணை இயக்குநருக்கு அனுப்பப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News