விளாத்திகுளத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பஞ்சாயத்து துணைத்தலைவர் பலி
- நேற்று வேடபட்டியில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக முனியசாமி விளாத்திகுளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேம்பார் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- அப்போது எதிர்பாராதவிதமாக முனியசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் பின் புறத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பேரிலோவன்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் முனியசாமி (வயது 63). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் 2 ஆண் குழந்தை கள் உள்ளனர். முனியசாமி பேரிலோவன்பட்டி பஞ்சாயத்து துணை தலை வராக இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வேடபட்டியில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக முனியசாமி விளாத்திகுளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேம்பார் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முனியசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் பின் புறத்தில் அடை யாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் முனியசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் போலீசார் முனியசாமியின் உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.