கோவை வழியாக பாலக்காடு - ஈரோடு ரயில் 29-ந் தேதி முதல் மீண்டும் இயக்கம்
- பாலக்காட்டில் இருந்து கோவை வழித்தடத்தில் ஈரோட்டுக்கு இயக்கப்பட்டு வந்த மெமு ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டது
- ெகாரோனா நோய்த் தொற்று பரவல் வெகுவாகக் குறைந்ததால் 2021-ம் ஆண்டு முதல் ெரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது
கோவை:
கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ரெயில்வே போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இதில் பாலக்காட்டில் இருந்து கோவை வழித்தடத்தில் ஈரோட்டுக்கு இயக்கப்பட்டு வந்த மெமு ெரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ெகாரோனா நோய்த் தொற்று பரவல் வெகுவாகக் குறைந்ததால் 2021-ம் ஆண்டு முதல் ெரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
இருப்பினும் சில வழித்தடங்களில் ெரயில்கள் இயக்கப்படாமல் இருந்தன. பாலக்காடு, கோவை, திருப்பூரில் இருந்து பணிக்குச் செல்வோர், கல்லூரி செல்வோரின் வசதிக்காக மெமு ெரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து பாலக்காடு - ஈரோடு ெரயில் ஜூலை 29-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பாலக்காடு கோட்ட ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாலக்காடு - ஈரோடு மெமு ெரயில் வரும் ஜூலை 29-ந் தேதி முதல் வியாழக்கிழமைகள் தவிர பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும். இந்த பாலக்காடு மெமு ெரயில் ( 06818) இரவு 7.10 மணிக்கு ஈரோடு சென்றடையும். ஜூலை 30-ந் தேதி காலை 7.15 மணிக்கு ஈரோட்டில் புறப்படும் மெமு ரயில் (எண்: 06819) காலை 11.45 மணிக்கு பாலக்காடு டவுன் நிலையத்தைச் சென்றடை யும்.
இந்த ரெயிலானது தொட்டிபாளையம், பெருந்துறை, ஈங்கூர், விஜ யமங்கலம், ஊத்துக்குளி, திருப்பூர் வஞ்சிபாளையம், சோமனூர், சூலூர் சாலை, இருகூர், சிங்காநல்லூர், பீளமேடு, வடகோவை, கோவை, போத்தனூர், மதுக்கரை, எட்டிமடை வாளையாறு, கஞ்சிக்கோடு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.