உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா விண்ணப்பபடிவங்களை வழங்கியபோது எடுத்த படம்.

நெல்லையில் பாளை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

Published On 2023-04-28 08:59 GMT   |   Update On 2023-04-28 08:59 GMT
  • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் நடைபெற்றது.
  • கூட்டத்தில் பூத் ஒன்றுக்கு 20 பேர் நியமிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்ட்டது.

நெல்லை:

பாளை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நெல்லை வண்ணார்பேட்டையில் நடைபெற்றது. மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட துணைத்தலைவர் பள்ளமடை பாலமுருகன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, அமைப்பு சாரா தொழிலாளர் அணி சிவந்தி மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் பகுதி செயலாளர்கள் வக்கீல் ஜெனி, திருத்து சின்னத்துரை, சண்முககுமார், காந்தி வெங்கடாசலம், மோகன், மேகை சக்திகுமார், சிந்து முருகன், பாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், வக்கீல்கள் ஜெயபாலன், அன்பு , வட்ட செயலார் பாறையடி மணி, வண்ணை கணேசன், பீர் முகம்மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பூத் ஒன்றுக்கு 20 பேர் நியமிப்பது, 8 பேர் கட்சி பொறுப்பிலும், 3 பேர் இளைஞர் பாசறை, 2 பேர் தகவல் தொழில்நுட்ப அணி மற்றவர்கள் அணி பொறுப்பிலும் இருக்குமாறு பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News