உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் பெயிண்டர் திடீர் சாவு

Published On 2023-11-02 13:00 IST   |   Update On 2023-11-02 13:00:00 IST
  • பாஸ்கருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதுண்டு.
  • அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர்.

கடலூர்:

பண்ருட்டி அடுத்த திருவதிகையை சேர்ந்தவர் பாஸ்கர்(50) பெயிண்டர். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதுண்டு. இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பாஸ்கர வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் பாஸ்கரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News