உள்ளூர் செய்திகள்

பாதாள சாக்கடையில் தவறி விழுந்த பெயிண்டர் பலி

Published On 2022-12-28 09:20 GMT   |   Update On 2022-12-28 09:20 GMT
  • பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • பூ மார்க்கெட் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார்.

கோவை,

கோவை ஆர்.எஸ்.புரம் சுந்தரம் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன்( வயது 40). பெயிண்டர். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இதனால் மணிகண்டன் தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். மாலையில் வேலை முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார்.

பின்னர் போதை தலைகேறிய நிலையில் மேட்டுப்பாளையம் ரோடு பூ மார்க்கெட் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது குடிபோதையில் அந்த பகுதியில் உள்ள சாக்கடையில் தவறி விழுந்து இறந்தார். இதனைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News