உள்ளூர் செய்திகள்

கோவையில் பெயிண்டர் விஷம் குடித்து சாவு

Published On 2023-03-05 09:31 GMT   |   Update On 2023-03-05 09:31 GMT
  • வினோத் பெயிண்டராக உள்ளார்.
  • வினோத் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரை, கிருஷ்ணாபுரம் ஏ.டி காலனியை சேர்ந்தவர் வினோத் (வயது36) பெயிண்டர். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு திருமணம் முடிந்து 11 ஆன்டுகள் ஆகிறது. இருந்தும் குழந்தை இல்லை. இதையடுத்து வினோத் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி இருந்தார். பின்னர் வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாமல் மனம் உடைந்து வந்தார். சம்பவத்தன்று வினோத் வாழக்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை குடித்து மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News