உள்ளூர் செய்திகள்

ஆலங்குளம் அருகே பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-10-16 09:07 GMT   |   Update On 2022-10-16 09:07 GMT
  • மார்ட்டின்ராஜ் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
  • மார்ட்டின்ராஜை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

நெல்லை:

ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் சார்லஸ். இவரது மகன் மார்ட்டின்ராஜ்(வயது 25). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவர் திடீரென விஷம் குடித்து மயங்கினார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News