உள்ளூர் செய்திகள்

ஓசூர், ஊத்தங்கரையில் மாணவி உள்பட 2 பேர் மாயம்

Published On 2023-02-08 15:45 IST   |   Update On 2023-02-08 15:45:00 IST
  • 17 வயது இளம்பெண். இவர் கடந்த 4-ந்தேதி அன்று வீட்டில் இருந்து மாயமானார்.
  • இதனால் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் கடந்த 4-ந்தேதி அன்று வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் போலீ சார் வழக்குபதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகி ன்றனர்.

இதே போல் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் 10-ம் வகுப்பு மாணவி. இவர் கடந்த 6-ந்தேதி அன்று வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவரது பெற்றோர் ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் எனது மகளை சங்கம்பட்டியை சேர்ந்த சதீஸ் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News