உள்ளூர் செய்திகள்
- ரூ.10.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தினை தமிழக செய்தித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்
- மொரட்டுப்பாளையம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.
ஊத்துக்குளி:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மொரட்டுப்பாளையம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.10.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.