உள்ளூர் செய்திகள்
ஊட்டி கேத்தி பேரூராட்சியில் நூலகம் திறப்பு
- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம மக்கள் இணைந்து அனைவரும் பயன் பெரும் வண்ணம் நூலகம் தொடங்கப்பட்டது.
- நூலகம் மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் கேத்தி பேருராட்சிக்கு உட்பட்ட சோகத்துரை சக்கலட்டி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம மக்கள் இணைந்து அனைவரும் பயன் பெரும் வண்ணம் நூலகம் தொடங்கப்பட்டது. முன்னதாக சக்கலட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் ஊர் தலைவர் ராஜி, சிவயோகி, சிவக்குமார், பேருராட்சி வார்டு உறுப்பினர் நிரோஷா, ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று பேசினர். இந்த நூலகம் மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.