உள்ளூர் செய்திகள்

ஊட்டி சோலாடி பகுதியில் அங்கன்வாடி மையம் திறப்பு

Published On 2023-09-24 14:49 IST   |   Update On 2023-09-24 14:49:00 IST
  • ஸ்ரீனிவாச அறக்கட்டளை புனரமைத்து உள்ளது
  • நிகழ்ச்சியில் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெலாகோட்டை ஊராட்சி, சோலாடி பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது.

இதனை தற்போது ஸ்ரீனிவாச அறக்கட்டளை புனரமைத்து உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.அப்போது கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவி கீர்த்தனா, நெலாக்கோட்டை ஊராட்சி தலைவர் டெர் மிலா, ஸ்ரீனிவாச அறக்கட்டளை செயலாளர் சுந்தர்ரா ஜன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி ஆகியோர் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் சோலடி பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News