உள்ளூர் செய்திகள்

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி வினாடி-வினா போட்டி - 10-ந் தேதி நடக்கிறது

Published On 2023-06-07 08:47 GMT   |   Update On 2023-06-07 08:47 GMT
  • பள்ளி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கும் வகையில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்காக இந்த போட்டி நடத்தப்படுகிறது.
  • இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://forms.gle/JJ6njTCh2cgqghJt6 என்ற இணைப்பின் மூலமாக காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை பங்கேற்கலாம்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான இணையவழி வினாடி-வினா போட்டி வருகிற 10-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. பள்ளி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கும் வகையில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்காக இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://forms.gle/JJ6njTCh2cgqghJt6 என்ற இணைப்பின் மூலமாக காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை பங்கேற்கலாம். மேலும் போட்டிகள் பற்றிய விவரம் அறிந்து கொள்ள ecesacoesiumevents@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ அல்லது 9443453030 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இணையவழி சான்றிதழ், அவர்களின் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் ஞா.வைஸ்லின் ஜிஜி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News