உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி

Published On 2023-02-02 07:40 GMT   |   Update On 2023-02-02 07:40 GMT
  • இவர் சாலையகை் கடக்கும்போது சென்னை நோக்கிச் சென்ற அசோக் லேலண்ட் தோஸ்த் வேன் மோதி தலையில் பலத்த காயம் அடைந்தார்.
  • அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்,

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது42) இவர் வீட்டில் இருந்து புறப்பட்டு உளுந்தூர்பேட்டைக்கு செல்லும்போது குணமங்கலம் பஸ் நிறுத்தம் என்ற இடத்தில் கடக்கும்போது கோவையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அசோக் லேலண்ட் தோஸ்த் வேன் மோதி தலையில் பலத்த காயம் அடைந்தார்

. அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார். இந்த சம்பவம் தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் சப் இன்ஸ்பெக்டர அலெக்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News