உள்ளூர் செய்திகள்

அத்தப்பூ கோலமிட்ட மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.

வள்ளியூர் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்

Published On 2022-09-09 08:53 GMT   |   Update On 2022-09-09 08:53 GMT
  • மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நிகழ்வாக மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படுகிறது.
  • வள்ளியூர் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியிலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வள்ளியூர்:

கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நிகழ்வாக மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படுகிறது.

வள்ளியூர் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியிலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.பள்ளி மாணவர்களுக்கு ஓணம் பண்டிகையின் பாரம்பரிய சிறப்பு, கொடுத்தல், பரிமாறுதல், அன்பு செலுத்துதல் ஆகியவற்றை பள்ளியின் முதல்வர் எடுத்து கூறினார். பள்ளி வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு கேரள பாரம்பரிய உடையணிந்து திருவாதிரை நடனமாடி பள்ளி மாணவர்கள் மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News