உள்ளூர் செய்திகள்

சிவபத்மநாதன்.


கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 7-ந் தேதி அமைதி பேரணி- சிவபத்மநாதன் அறிக்கை

Published On 2022-08-05 09:09 GMT   |   Update On 2022-08-05 09:09 GMT
  • கலைஞர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி பேரணி நடைபெற உள்ளது.
  • பேரணியில் தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ளுமாறு சிவபத்மநாதன் அறிக்கையில் கூறியுள்ள்ளார்.

தென்காசி:

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், முன்னாள் தி.மு.க. தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி பேரணியும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது.

அதன்படி நாளை மறுநாள் (7-ந் தேதி) காலை 8 மணிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரம் யூனியன் அலுவலகத்தில் இருந்து பாவூர்சத்திரம் பஸ் நிலையம் வரை கலைஞரின் புகைப்படம் தாங்கிய பதாகைகள் உடன் அமைதி பேரணி நடைபெற இருக்கிறது.

இப்பேரணியில் மாநில நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், நகர, பேரூர், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு பொறுப்புகளில் இருக்கிற கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு கலைஞரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News