உள்ளூர் செய்திகள்

பிறந்த நாளை முன்னிட்டு ஜான்பாண்டியனை மாநகர மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன், இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததையும், 50 கிலோ கேக் வெட்டி கொண்டாடியதையும் படத்தில் காணலாம்.

ஜான்பாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர் மாவட்ட த.ம.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Published On 2022-12-02 09:27 GMT   |   Update On 2022-12-02 09:27 GMT
  • ஜான்பாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு 50 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
  • பாளை காது கேளாதோர் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது.

நெல்லை:

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர மாவட்டம் சார்பில் மாநகர செயலாளர் துரைப்பாண்டியன் தலைமையில் 50 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மேலும் மாநகரில் பல்வேறு பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு, பாளை காது கேளாதோர் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநகர இளைஞரணி தலைவர் மணிமாறன், மாநகர இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி, மேலப்பாளையம் பகுதி செயலாளர் மாரிமுத்து, பகுதி இணைச் செயலாளர் முருகேஷ் பாண்டியன், பாளை பகுதி இளைஞர் அணி செயலாளர் கே .எஸ். ராஜா, தொண்டரணி பொறுப்பாளர் மாரியப்பன், மேலப்பாளையம் பகுதி இளைஞரணி தலைவர் நாதன், இளைஞர் அணி செயலாளர் செந்தில் மல்லர், மாணவர் அணி பொறுப்பாளர் முத்து பரத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News