உள்ளூர் செய்திகள்

கபிலர்மலையில் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-07-20 09:05 GMT   |   Update On 2022-07-20 09:05 GMT
  • கபிலர்மலையில் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சசிகலா மற்றும் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலக்குறிச்சி ஊராட்சி கபிலர்மலையில் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கபிலக்குறிச்சி ஊராட்சித்தலைவர் வடிவேல் தலைமை வகித்தார். ஊராட்சி துணைத்த லைவர் குணவதி முன்னிலை வகித்தார்.

களப்பணியாளர் வடமலை வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக நிறு வன இயக்குனர் சரவ ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி–யில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சசிகலா மற்றும் ஏராள மானோர் கலந்து கொண்டனர். முடிவில் களப்பணியாளர் கணேசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News