உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

Published On 2022-12-31 08:49 GMT   |   Update On 2022-12-31 08:49 GMT
  • அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது.
  • சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.

கடலூர்:

திட்டக்குடி அருகே தச்சூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல்.அவரது மனைவி பெரியம்மாள் (வயது 75). இவர் நேற்று இரவு தனது காட்டுக் கொட்டையின் முன்பு படுத்திருந்தபோது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து மூதாட்டியின் மீது மோதி சென்ற இருசக்கரவாகனம் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News