உள்ளூர் செய்திகள்

தூக்குபோட்டு மூதாட்டி சாவு

Published On 2023-05-19 15:01 IST   |   Update On 2023-05-19 15:01:00 IST
  • பழனியம்மாள் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • குடும்ப தகராறு காரணமாக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி, 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே செங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது65). கணவன்-மனைவி இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பழனியம்மாள் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கணவர் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து பழனியம்மாளின் உடலை மீட்டு பிரேதபரி சோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் குடும்ப தகராறு காரணமாக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறுஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News