உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

Published On 2023-04-11 12:01 IST   |   Update On 2023-04-11 12:01:00 IST
  • முனுசாமி (வயது 75). இவர் திண்டிவனம் ஜக்காம்பேட்டை சாலையை கடக்க முயன்றார்
  • அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் முனுசாமி மீது மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் ஜக்காம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 75). இவர் திண்டிவனம் ஜக்காம்பேட்டை சாலையை கடக்க முயன்றார். அப்பொழுது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் முனுசாமி மீது மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து மயிலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மகாராஜாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News