உள்ளூர் செய்திகள்

வாணாபுரம் அருகே லாரி மோதி முதியவர் பலி

Published On 2023-10-03 07:55 GMT   |   Update On 2023-10-03 07:55 GMT
  • வாணாபுரம் அருகே லாரி மோதி முதியவர் பலியானார்.
  • பொறுபாலம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜான் போஸ்கோ என்பது தெரியவந்தது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா தொண்டனந்தல் அருகே 60 வயது மதிக்கத்தக்க அடை யாளம் தெரியாத நபர் லாரி மோதி இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த பகண்டை கூட்டு ரோடு போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த வரின் உடலை கைப்பற்றி அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்தியது பொறுபாலம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜான் போஸ்கோ (35) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News