உள்ளூர் செய்திகள்
தஞ்சையில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கீழவாசல் பாலோபந்தவனம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம் (வயது 64). சம்பவத்தன்று இவர் வடக்கு வாசல் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாம்பசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் தீராத வயிற்று வலி காரணமாக சாம்பசிவம் தற்கொலை செய்தது தெரியவந்தது. இருப்பினும் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.