உள்ளூர் செய்திகள்

மூதாட்டி மாயம்

Published On 2022-06-24 09:47 GMT   |   Update On 2022-06-24 09:47 GMT
  • சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் மூதாட்டி மாயமானார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பண்டார இடும்பமுதலியார் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 58).

இவருடைய சகோதரி ராஜேஸ்வரி (60). கணவனை இழந்த ராஜேஷ்வரி கடந்த 17 வருடமாக தம்பி செல்வகுமாரின் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந்தேதி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து செல்வகுமார் தாரமங்கலம் போலீசில் தனது சகோதரியை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News