- சௌசௌ காய்கறி விவசாயம் செய்து வரும் விவசாய நிலங்கள் ஆய்வு.
- நெல், பயறு, உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழத்தஞ்சாவூர் ஊராட்சி பகுதியில் மாநில தோட்டக்கலைத்துறை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மலைப்பயிரான சௌசௌ காய்கறி விவசாயம் செய்து வரும் விவசாய நிலங்களை திருமருகல் உதவி தோட்டக்கலை அலுவலர் செல்ல பாண்டியன் ஆய்வு செய்தனர்.
அப்போது அவர் கூறுகையில்:-
விவசாயிகள் டெல்டா பகுதிகளில் நெல், பயறு, உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்களை மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனர்.
இதற்கு மாற்று பயிராக மலைப்பயிரான சௌசௌ, உருளை, ஆப்பிள் சாகுபடியினை சோதனை அடிப்படையில் ஒன்றியத்து க்குட்பட்ட விவசாயிகளுக்கு சாகுபடி செய்ய அறிவுறுத்தி தற்போது சாகுபடி செய்து அறுவடை செய்து வருகின்றனர்.
இதன் மூலம் விவசாயிகள் நல்ல லாபம் கிடைப்ப தாகவும், வியாபாரிகள் வீட்டிற்க்கே வந்து காய்கறிகளா எடுத்துச் செல்வதாகவும் இதனால் செல வில்லாமல் லாபம் ஈட்டி வருவதாக தெரிவிப்ப தாகவும் இதேபோல் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து விவசாயிகளும் முன்வந்து மாற்று பயிராக தோட்டக்கலை காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.