உள்ளூர் செய்திகள்
தேவதானப்பட்டியில் நர்சிங் மாணவி காதலனுடன் மாயம்
- நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த மாணவி தனது காதலனுடன் மாயமானார்.
- போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகில் உள்ள கெங்குவார்பட்டி ஸ்ரீராம்நகரை சேர்ந்த சரவணன் மகள் சரண்யா என்ற லோகநாயகி(20). இவர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
அப்போது நிலக்கோட்டை வெரியப்பன்பட்டியை சேர்ந்த வீரக்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் பேசிபழகி வந்துள்ளார். இதனை அவரது தாய் சந்தனலட்சுமி கண்டித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சரண்யா வத்தலக்குண்டு சென்று வருவதாக கூறிச்சென்றவர் மாயமானார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தனது மகனை வீரக்குமார்தான் கடத்திச்சென்றிருக்ககூடும் என்று அவரது தாய் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.