கோவை அருகே காதலியுடன் கருத்து வேறுபாட்டால் நர்சிங் மாணவர் தற்கொலை
- சத்தியநாராயணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கும்பகோணம் உடையாளூரை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சத்தியநாராயணன் (வயது 19). இவர் திருமலையாம் பாளையத்தில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி அங்குள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று அறையில் தனியாக இருந்த சத்தியநாராயணன் அறையில் உள்ள சமையல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
நண்பர்களின் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட சத்தியநாராயணன் கும்பகோணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பேசாமல் இருந்து வந்தனர். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்பது தெரிய வந்தது.
பின்னர் போலீசார் இறந்த சத்தியநாராயணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.