- 15 அடி உயரத்தில் நின்று கொண்டு இருந்தார்.
- தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
கோவை,
உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் ராம்பால் (வயது 27). இவர் கோவை வந்து அன்னூரில் தங்கி பெயிண்டராக வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று ராம்பால் அன்னூரில் உள்ள தனியார் பள்ளிக்கு வேலைக்கு சென்றார். அங்கு 15 அடி உயரத்தில் நின்று பெயிண்ட் அடித்து கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சை க்காக கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராம்பால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.