உள்ளூர் செய்திகள்

அன்னூரில் கியாஸ் கசிந்து தீ விபத்து வடமாநில தொழிலாளி சாவு

Published On 2023-06-19 09:22 GMT   |   Update On 2023-06-19 09:22 GMT
  • கியாஸ் தீ விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது
  • கோவில்பாளையம் தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அன்னூர்,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே பிள்ளையப்பம்பாளையத்தில் தனியார் செயின் தொழிற்சாலை உள்ளது.

இங்கு வடமாநில தொழி லாளர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகிறார்கள்.

வடமாநில தொழிலா ளர்கள் தங்குவதற்கு தொழிற்சாலையின் எதிர்புறமும் விடும் உள்ளது.

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இரவு வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு அறையில் திடீரென கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.

இதில் வடமாநில தொழிலாளர்களான உத்தரபிரதேசத்தை சேர்ந்த அனுராக் சிங், தன்ஜெய் சிங், மத்திய பிரதேசத்தை சேர்ந்த வீரேந்திரஜா, தரம்வீர், மகாதேவ் சிங் ஆகிய 5 பேர் தீயில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

இதை பார்த்த சக தொழிலாளர்கள் ஓடி வந்து 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை மற்றும் கோவில்பாளை யத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப ட்டு வந்தது. கடந்த 16-ந் தேதி உத்தரபிரதேசத்தை சேர்ந்த அனுராக் சிங் மற்றும், தன்ஜெய் சிங் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை கோவில்பாளையம் ஆஸ்பத்திரியில் சிகிச்ைச பெற்று வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த வீரேந்திரஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் கியாஸ் தீ விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

தரம்வீர், மகாதேவ் ஆகியோர் கோவில்பாளையம் தனியார் ஆஸ்பத்திரி யில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News