உள்ளூர் செய்திகள்

சிதம்பரத்தில் கூத்தாடும் பிள்ளையார் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையார் கோவில் தேரோட்டம்

Published On 2023-09-18 09:36 GMT   |   Update On 2023-09-19 02:49 GMT
  • சிதம்பரத்தில் கூத்தாடும் பிள்ளையார் கோவில் தேரோட்டம் நடந்தது.
  • எட்டுவிதமான வாகனங்களில் பிள்ளையார் வீதியுலா நடைபெற்றது.

கடலூர்: சிதம்பரம் பெரியார் தெருவில் உள்ள கூத்தாடும் பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாள்கள் உற்சவம் கடந்த செப்.9-ப் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

தினந்தோறும் இரவு எட்டுவிதமான வாகனங்களில் பிள்ளையார் வீதியுலா நடைபெற்றது. 9-ம் நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேகம் ஆராதனை, விநாயகர் வீதி உலா நடைபெற்றது. பல்லக்கு உற்சவத்துடன் நாளை விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை ராமச்சந்திரன் தலைமையிலான பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News