கோவை அருகே காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
- அஸ்மிதா, முருகராஜ் என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்தார்.
- வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார்.
கோவை,
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் அஸ்மிதா (வயது 19).
இவர் கடந்த மாதம் 24-ந் தேதி கிணத்துக்கடவு அருகே உள்ள சட்டக்கல்புதூரை சேர்ந்த முருகராஜ் என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்தார்.
இந்த நிலையில் அஸ்மிதா கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அஸ்மிதாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர கிசிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அஸ்மிதா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கிணத்து க்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அஸ்மிதா திருமணமான ஒரு மாதத்தில் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.