உள்ளூர் செய்திகள்

புதிய வகுப்பறை கட்டிட கட்டுமான பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

விளாத்திகுளம் அருகே ரூ. 85 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2023-09-30 08:54 GMT   |   Update On 2023-09-30 08:54 GMT
  • அரியநாயகிபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் கூடுதலாக 4 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
  • அதனை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 85 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 4 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயபிரகாஷ், ராஜன், துணை ஆய்வாளர் ரமேஷ், பள்ளி தலைமை ஆசிரியை கனி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, விளாத்தி குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ்,

ஊராட்சிமன்ற தலைவர் மாரியம்மாள், விளாத்தி குளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், சமூகவலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட தி.மு.க. நிர்வாகிகள், ஆசிரிய-ஆசிரியைகள், கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News