உள்ளூர் செய்திகள்
பேட்டை பகுதிக்கு புதிய மின் மாற்றி
- நெல்லை மின் பகிர்மானத்திற்கு உட்பட்ட நகர்புற கோட்டத்தில் பழையபேட்டை உப மின் நிலையம் உள்ளது.
- மின்தடை சாதனம் நிறுவப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மானத்திற்கு உட்பட்ட நகர்புற கோட்டத்தில் பழையபேட்டை உப மின் நிலையத்தில் இருந்து பேட்டை பகுதிக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செல்லும் மின் பாதைக்கு உண்டான காலாவதியான 11 கிலோ வோட் மின்தடை சாதனம் மாற்றப்பட்டு புதிய மின்தடை சாதனம் நிறுவப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இப்பணியை செயற்பொறியாளர் (பொறுப்பு) ஷாஜஹான் தலைமையில் சிறப்பு பராமரிப்பு பிரிவு தாழையூத்து, மின் அளவி சோதனை பிரிவு தாழையூத்து, உப மின் நிலையம் மற்றும் பழையபேட்டை உபகோட்ட பிரிவு அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களால் செய்து முடிக்கப்பட்டது.