உள்ளூர் செய்திகள்

வாலிபரை குடும்பத்துடன் சேர்ந்து தாக்கிய பக்கத்து வீட்டுப் பெண்

Published On 2023-09-15 09:20 GMT   |   Update On 2023-09-15 09:20 GMT
  • வேறு ஒருவருடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம்
  • காரமடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கோவை,

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 39 வயது வாலிபர். இவர் காரமடை போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதா வது:-

எனக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு கணவரை இழந்த எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 35 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்ேதாம்.

இளம்பெண் சமையல் வேலைக்கு சென்று வந்தார். அப்போது அவருக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் என்னுடன் பழகுவ தையும், தனிமையில் இருப்பதையும் தவிர்த்து வந்தார். மேலும் இளம் பெண் புதிதாக பழக்கமான வாலிபரை அவரது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

சம்ப வத்தன்று நான் அவரது வீட்டிற்கு செ ன்று என்னை ஏமாற்றி விட்டு இன்னொ ருவருடன் ஏன் பழகுகிறாய் என கேட்டேன். எங்களுக்கு இடையே தக ராறு ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்த இளம்பெண், அவரது சகோதரர் மற்றும் மகன் ஆகியோர் சேர்ந்து என்னை கிரிக்கெட் மட்டை யால் தாக்கினர்.

இதில் எனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நான் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தேன். எனக்கு தலையில் 7 தையல் போடப்பட்டு உள்ளனர். எனவே என்னை தாக்கிய இளம்பெண், அவரது சகோதரர், மற்றும் மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் காரமடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News