உள்ளூர் செய்திகள்

வேப்பனப்பள்ளி அருகே கேட்பாரற்று நின்றிருந்த கார் பறிமுதல்

Published On 2022-06-20 15:33 IST   |   Update On 2022-06-20 15:33:00 IST
  • கடந்த ஒரு வாரமாக நிறுத்தப்பட்டிருந்த காரை போலீசார் சோதனை செய்தனர்.
  • காரை கைப்பற்றி காவல் நிலையத்தில் கொண்டு வந்தனர்.

வேப்பன ஹள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கங்கமடுகு கிராமத்தின் அருகே சாலை ஓரத்தில் கடந்த ஒரு வாரமாக நிறுத்தப்பட்டிருந்த காரை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அடையாளம் தெரியாத நபர்களால் கார் நிறுத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வேப்பனப்பள்ளி போலீசார் காரை கைப்பற்றி காவல் நிலையத்தில் கொண்டு வந்தனர்.

பின்னர் இந்த கார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News