வானூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் வசதி வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
- வானூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் வசதி வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
- மேல் தளம் சேதம டைந்துள்ளதால் மழை நீர் மருத்துவமனை முழுவதும் ஒழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பொம்பூர் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றகர். பொம்பூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழை காலங்களில் மேல் தளம் சேதம டைந்து ள்ளதால் மழை நீர் மருத்து வமனை முழுவதும் ஒழுகும் நிலை ஏற்பட்டு ள்ளது.இதனால் நோயாளிகள் அவதி ப்படுகி ன்றனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை இதனால் கர்ப்பிணி பெண் ஒருவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்கு வந்த போது மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டி யம்பாக்கம் ஆஸ்ப த்திரிக்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அந்த கர்ப்பிணி பெண் மரணம் அடைந்து உள்ளார். எனவே பொம்பூர் மருத்து வமனைக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் சேவை தொடங்க வேண்டும். இல்லை யென்றால் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைத்து சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.