உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் அருகே சாலையை கடக்க முயன்ற விவசாயி கார் மோதி பலி: மனைவி கண்முன்னே பரிதாபம்

Published On 2023-04-11 05:07 GMT   |   Update On 2023-04-11 05:07 GMT
  • தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து கொண்டு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.
  • சென்னை மார்க்கமாக வேகமாக வந்த கார் விவசாயி அய்யனார் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓலக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். விவசாயி. இவரது மகளுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.குழந்தையை பார்த்துவிட்டு அங்கிருந்த தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து கொண்டு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.அப்பொழுது தனது சொந்த ஊரில் பஸ்சில் இருந்து இறங்கி, வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்பொழுது சென்னை மார்க்கமாக வேகமாக வந்த கார் விவசாயி அய்யனார் மீது மோதி தூக்கி வீசப்பட்டார். அவரது மனைவியின் கண் முன்னே சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிர் இழந்தார்.

இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News