உள்ளூர் செய்திகள்
தியாகதுருகம் அருகே முன்விரோத தகராறு; 8 பேர் மீது வழக்கு பதிவு
- இரு தரப்பினரும் ஒருவரையொரு வர் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
- வரஞ்சரம் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே விருகாவூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 50). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (38) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்ப வத்தன்று இரு தரப்பினரும் ஒருவரையொரு வர் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆதிமூலம் கொடுத்த புகாரின் பேரில் அரிகிருஷ்ணன், கலிவரதன், மதுர முத்து ஆகிய 3 பேர் மீதும், இதேபோல் ராதா கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஆதிமூலம், ராஜி மற்றும் அவரது மனைவி சிவகாமி, மகன் தனுஷ், ஆதிமூலம் மகன் மணிகண்டன் ஆகிய 5 பேர் மீதும் வரஞ்சரம் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.