உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகேபணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
தேவபாண்டலம் சுடுகாடு அருகே பணம் வைத்து 7 பேர் சூதாடிக்கொண்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீசார் தேவபாண்டலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தேவபாண்டலம் சுடுகாடு அருகே பணம் வைத்து 7 பேர் சூதாடிக்கொண்டிருந்தனர்.
விசாரணையில், தேவபாண்டலத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 34), பிரகாஷ் (30), தயாநிதி (33), பத்ரிநாத் (23), அன்பரசன் (34) மற்றும் வடசிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (40), ராஜ்குமார் (28) என்பது தெரியவந்தது. 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த சங்கராபுரம் போலீசார் அவர்களை கைது செய்தனர்.