உள்ளூர் செய்திகள்

 பிரகாஷ் 

பண்ருட்டி அருகே பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் கைது

Published On 2022-07-31 06:45 GMT   |   Update On 2022-07-31 06:45 GMT
  • பண்ருட்டி அருகேபெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
  • நகை செல்போன் ஆகியவைபோலீசார் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில்அடைத்தனர்

கடலூர்:

பண்ருட்டி அருகே காடாம்பு லியூர்கொஞ்சிகுப்பம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யானந்தன் இவரது மனைவி ராதா (37). இவர், காடாம்புலியூர் மாயா கார்டன் ரவி என்பவரின்தோப்பில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர்இவரை மிரட்டி இவர் அணிந்து இருந்த செயின்மற்றும் செல்போ னை பறித்துசென்றா ர்.

இதுகுறித்து காடாம்பு லியூர் போலீசா ர்வழக்குபதிவுசெய்து விசா ரணை நடத்திவந்தனர். கடலூர் எஸ்பி சக்தி கணேஷ் உத்தரவின் பேரின் பண்ருட்டி துணைபோலீ ஸ்சூப்பிரண்ட் சபியுல்லா மேற்பார்வையில் காடாம்பு லியூர் இன்ஸ்பெக்ட ர்ராஜதாமரை பாண்டியன்,சப்இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், போலீசார் ரகு மர்மஆசாமியை வலைவீசி தேடி வந்தனர்.

நேற்று சாத்திப்பட்டு பஸ்நிறுத்தம் அருகில் போலீசா ர்வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தார். அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையி ல்காடாம்புலியூர் அடுத்த தெற்குமேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் ( 27 ) என தெரிய வந்தது. இவர் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த பெண்ணிடம் நகை பறித்தை ஒப்பு க்கொண்டார்

இதனை தொடர்ந்துஅவரை கைது செய்துஅவரிடமிருந்து நகை செல்போன் ஆகியவைபோலீசார் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில்அடைத்தனர்

Tags:    

Similar News