உள்ளூர் செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வாலிபர் தற்கொலை

Published On 2022-07-03 10:01 GMT   |   Update On 2022-07-03 12:16 GMT
  • வாங்கிய பணத்தை கொடுக்காமல் கூறியபடி வேலையும்வாங்கி கொடுக்காமல் மாதக்கணக்கில் ஏமாற்றி உள்ளார்.
  • பணம் கொடுத்தவர்கள் பிரபாகரனிடம் பணத்தை கொடு என்று தொந்தரவு செய்துள்ளனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தாழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்பிரபாகரன் (வயது 34). டிப் டாப் வாலிபரான இவர் தனக்கு அரசுஅதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் பழக்கம் இருப்பதாகவும் அதன்மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி பல பேரிடம் ரூ.20 லட்சத்திற்குமேல் பணம் வசூல் செய்தார்.

அதனை தொடர்ந்து உரியவரிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமல் கூறியபடி வேலையும்வாங்கி கொடுக்காமல் மாதக்கணக்கில் ஏமாற்றி வந்ததார். இதனால் சந்தேகம் அடைந்து பணம் கொடுத்தவர்கள் பிரபாகரனை பணத்தை கொடு என்று தொந்தரவு செய்துள்ளனர். பணத்தை கொடுக்க முடியாத பிரபாகரன் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார், தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

Tags:    

Similar News