உள்ளூர் செய்திகள்
கோப்புபடம். 

பல்லடம் அருகே மாரியம்மன் கோவிலில் தங்கத்தாலி திருட்டு

Published On 2022-11-12 08:05 GMT   |   Update On 2022-11-12 08:05 GMT
  • மர்ம நபர்கள் உள்ளே புகுந்து உண்டியலில் வைத்திருந்த ரூ.3500 யை திருடி சென்றனர்.
  • பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பல்லடம்:

பல்லடம் அருகேயுள்ள செம்மிபாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் கதவின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க தாலியை மர்மநபர்கள் திருடி சென்றனர். அதே பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் மேற்கூரையை பிரித்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து உண்டியலில் வைத்திருந்த ரூ.3500 யை திருடி சென்றனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News