உள்ளூர் செய்திகள்

மாரண்ட அள்ளி அருகே துப்புரவு தொழிலாளி தற்கொலை

Published On 2022-09-09 09:31 GMT   |   Update On 2022-09-09 09:31 GMT
  • கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

தருமபுரி,

தருமபுரி அப்பாவு நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 44).

இவர் மாரண்ட அள்ளி அருகே உள்ள மல்லாபுரம் பள்ளியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். மீண்டும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்த தற்கொலை குறித்து தருமபுரி நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News