உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 வாலிபர்கள் தற்கொலை

Published On 2022-08-05 15:50 IST   |   Update On 2022-08-05 15:50:00 IST
  • கடந்த 24-ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
  • சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் நேற்று இரவு உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சரகம் ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் பிரகாஷ் (வயது 23). குடும்ப தகராறில் மனமுடைந்த பிரகாஷ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து பிரகாஷின் மனைவி வள்ளி தந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல காவேரிப்பட்டினம் போலீஸ் சரகம் ஏ .ராஜகுட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (19) என்ற வாலிபர் தீராத தலைவலியால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாமல் கடந்த 24-ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News