என் மலர்
நீங்கள் தேடியது "2 வாலிபர்கள் தற்கொலை"
- தேனி அருகே திருமண ஏக்கத்தில் 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் 29-வது வார்டு பகுதிைய சேர்ந்த சீனிவாசன் மகன் அருண்குமார்(32). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார்.
இவரது நண்பர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்ட நிலையில் பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் நடக்கவில்லை. இதனால் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தேனி மாவட்டம் சுருளிபட்டியை சேர்ந்த சேகர் மகன் பெருமாள்(29). தந்தை இறந்துவிட்டதால் தனது தாயுடன் திருப்பூரில் வேலைபார்த்து வந்தார். பல வருடங்களாக திருமணத்திற்காக பெண் பார்த்தும் கைகூடவில்லை.
இதனால் மனவேதனையில் இருந்த பெருமாள் பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 24-ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
- சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் நேற்று இரவு உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சரகம் ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் பிரகாஷ் (வயது 23). குடும்ப தகராறில் மனமுடைந்த பிரகாஷ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து பிரகாஷின் மனைவி வள்ளி தந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல காவேரிப்பட்டினம் போலீஸ் சரகம் ஏ .ராஜகுட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (19) என்ற வாலிபர் தீராத தலைவலியால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாமல் கடந்த 24-ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






