உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே வாலிபரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

Published On 2022-07-29 15:22 IST   |   Update On 2022-07-29 15:22:00 IST
  • தகராறில் 2 பேரும் இம்ரானை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
  • மணிகண்டன் (28), சஞ்சீவ் குமார் (34) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நகர் பெருமாள் நகரைச் சேர்ந்தவர் இம்ரான் (வயது 27). இவர் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இதற்காக பொருட்களை ஏற்றிக்கொண்டு மினி ஆட்டோ மூலம் சென்று கொண்டிருந்தார்.

அப்ேபாது வழியில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் குடிபோதையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை ஓரமாக நிற்கும்படி இம்ரான் கூறினார். இதனால் அவர்களிடைேய ஏற்பட்ட தகராறில் 2 பேரும் இம்ரானை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதில் காயம் அடைந்த இம்ரான் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் இம்ரானை தாக்கிய மணிகண்டன் (28), சஞ்சீவ் குமார் (34) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

Similar News