உள்ளூர் செய்திகள்

கந்திகுப்பம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

Published On 2022-10-13 14:55 IST   |   Update On 2022-10-13 14:55:00 IST
  • போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்
  • பெருமாள், போகனபள்ளியை சேர்ந்த சுரேஷ் ஆகிய 5 பேரை கந்திகுப்பம் போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அடுத்துள்ள ஒபிகுப்பம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது பணம் வைத்து சூதாடியதாக குருவிநாயனப்பள்ளியை சேர்ந்த கிருஷ்ணன், விஜயன், சின்னதம்பி, பெருமாள், போகனபள்ளியை சேர்ந்த சுரேஷ் ஆகிய 5 பேரை கந்திகுப்பம் போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News