உள்ளூர் செய்திகள்

கல்வராயன் மலை அருகே நிலத்தகராறில் கோஷ்டிமோதல்; 7 பேர் மீது வழக்கு

Published On 2022-08-18 07:16 GMT   |   Update On 2022-08-18 07:16 GMT
  • பூவரசிக்கும், பால்ராஜ் என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது.
  • கரியாலூர் போலீஸ் நிலையத்தில் இரு தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கென்டிக்கல் கிராமத்தைச் சேர்ந்த பூவரசி. இவருக்கும், தாழ் கெண்டிக்கல் கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து இரு கோஷ்டியினரும் மோதி கொண்டனர். இது குறித்து கரியாலூர் போலீஸ் நிலையத்தில் இரு தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பூவரசி கொடுத்த புகாரில் பால்ராஜ், கணேசன், லட்சுமணன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல் பால்ராஜ் கொடுத்தாரின் பேரில் கிருஷ்ணன், ராஜ்குமார், சசிகுமார், தமிழ்மணி ஆகிய 4 பேரும் மீதும் என இரு தரப்பிலும் சேர்த்து மொத்தம் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News